Saturday, August 14, 2010

மந்திரப் பெட்டி - 3

மந்திரப் பெட்டி - 2


அதே ஆயிரம் வருடங்களுக்கு முன்… அதே நாள்… அதே அந்திப் பொழுது!

அதே அடர்ந்த வனம்… அதே அழகியக் குடில்!

நகுலனும் தீரனும் மந்திரப் பெட்டியை கொடுமுடியானிடம் பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்று அரை நாழிகையில் கொடுமுடியானின் சீடன் தயங்கிக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“குருவே! அடியேனுக்கு ஒரு சந்தேகம்.”
“ம்… கேள் சிஷயா. உன் மனதை உறுத்தும் ஐயம் என்னவோ?”
“ஒரு வேளை நம் மன்னர் மந்திரப் பெட்டியை உபயோகப் படுத்தாமல் தங்களிடம் திருப்பி அனுப்பி விட்டால் அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?”
“சீடனே, இவ்வுலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மாற்று மந்திரம் உண்டு. எனது மந்திரப் பெட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. காளி அன்னைக்கு பூஜை செய்து மாற்று மந்திரத்தை ஜபித்தால் மந்திரப் பெட்டி தன் சக்தியை இழந்துவிடும்”

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் கொடுமுடியான்.
“ஆனால் இந்த மந்திரப் பெட்டியை பொருத்தவரை அதை செயலிழக்கச் செய்ய மாற்று மந்திரத்தை விட சுலபமான வழி ஒன்று உள்ளது.”
அது என்ன என்பது போல் சீடன் ஆவலுடன் நோக்க கொடுமுடியான் தொடர்ந்தான்.
“நான் அந்தப் பெட்டிக்குள் செதுக்கி இருக்கும் மந்திரம் நெருப்புடன் தொடர்புடையது. அந்த மந்திரப் பெட்டியின் உட்புறம் ஒரு துளி நீர் பட்டாலும் அடுத்த நொடி மந்திரம் பயனற்றுப் போய் விடும்!”

--- முற்றும்

No comments: