Wednesday, February 16, 2011

தேடல்

காடுகளில் தேடியாச்சு
வீடுகளில் தேடியாச்சு
ஆலயங்களில் தேடியாச்சு
மடங்களில் தேடியாச்சு
தூண்களிலும் தேடியாச்சு
துரும்புகளிலும் தேடியாச்சு

தெருத்தெருவா தேடி அலஞ்சும்
கிடைக்கலையே எந்தச் சாமியும்
தலத்தலையா அடிச்சு சொல்லியும்
திருந்தலையே எந்த ஆசாமியும்

பிள்ளைக்கு குடுக்க
பால் இல்லேனாலும்
சாமி சிலைக்கு
பாலூத்த மறந்ததில்ல!

அடுத்தவேளை சோத்துக்கு
வழி இல்லேனாலும்
நேத்திக் கடனுக்கு
ரத்தஞ்சிந்த நொந்ததில்ல!

அன்னாடம் வீட்டுல
அடுப்பெறிக்க வக்கில்லேனாலும்
எவன்சாமி பெருசுன்னு
சண்டபோட சலைச்சதில்ல!

உரிமைக்கும் உடைமைக்கும்
குரல்கொடுக்க துப்பில்லேனாலும்
தன்சாமி மானங்காக்க
தலையறுக்க தயக்கமில்ல!

இருக்கிற பிரச்சனைகளே
தலைக்குமேல ஓங்கிநிக்க
இல்லாத பிரச்சனைக்கு
விலைகொடுக்க யோசிக்கவில்ல!

வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும்
ஆஞ்சு அடங்கி
ஒஞ்சு போயும்
எவனுக்கும் புத்தி வரல

இத்தன கொடுமையும்
வாடிக்கையா மனுசன் செய்ய – இத
வேடிக்கை பார்க்கக்கூட
அந்த சாமி வரல!

No comments: