Tuesday, April 08, 2014

யார் தலையில் மண்?

செய்தி: யுவராஜ் வீடு தாக்கப்பட்டது!

நான்: நல்லா வேணும். ஆட்டமா ஆடினான். ஃபைனல்ல வந்து தடவிட்டு இருந்தான்.
மனசாட்சி: தம்பி... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
நான்: வந்துட்டியா... வேண்டாம்னா விடவா போற? கேட்டுத் தொல!
மனசாட்சி: நீ லூசு தானே!?
நான்: (அனல் பறக்க) என்ன சொன்ன?
மனசாட்சி: பின்ன என்னடா? எது எதுக்கு கல்லெடுக்கணும்னு ஒரு விவஸ்தை இல்ல!?
நான்: எத்தனை கோடி கிரிக்கெட் ஃபேன்ஸ ஏமாத்தி இருக்கான்... இதுக்கு கல்லெடுக்காம வேற எதுக்கு எடுக்கணும்?
மனசாட்சி: அட முட்டாப் பயலுகளா... இது ஒரு விளையாட்டுடா! தோக்கிறதும் ஜெயிக்கிறதும் சகஜம். இத்தனை கோடி விசிறிகள ஏமாத்திட்டான்னு குதிக்கிறீங்களே... உங்க நாட்டுல உள்ள அத்தனை கோடி பேரையும் அரசியல்வாதி போர்வையில இருந்துகிட்டு எத்தனையோ பேர் எத்தனையோ வருஷமா ஏமாத்துறாங்களே... அங்கெல்லாம் உங்களோட ஒரு கல் கூட பாயலியே... ஏன்?
நான்: (அவங்கள எல்லாம் அடிச்சா திருப்பி அடிப்பானுங்களே... அவ்வ்வ்)
மனசாட்சி: நீ பேசமாட்ட டா... நானே சொல்றேன். அங்கெல்லாம் வாலாட்ட பயம்... உங்களுக்கு செலிபிரிட்டிஸ் தான இளிச்சவாயனுங்க!
நான்: அப்படினு இல்ல... வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மேட்ச் பார்க்கும் போது இப்படி விளையான்டா கோபம் வராதா?
மனசாட்சி: நீ வேலை வெட்டிய விட்டுட்டு மேட்ச் பார்த்தது அவர் தப்பா? இல்ல உன் கை கால்ல விழுந்து அவர் உன்ன மேட்ச் பார்க்க கூப்பிட்டாரா?
நான்: (ஆரம்பிச்சுட்டான்யா... இனி நம்மள கற்பழிக்காம விட மாட்டானே...)
மனசாட்சி: இதே யுவராஜ் ஆஸ்திரேலியா கூட அறுபது ரன் எடுத்தப்ப பல்ல இளிச்சிட்டு பார்த்த இல்ல...
நான்: ஆ... ஆ... ஆமா!
மனசாட்சி: நீங்க இங்க இருக்கிற அவங்க வீட்டுல போய் அட்டகாசம் பண்ணிட்டு இருப்பீங்க... இதையெல்லாம் மறந்துட்டு வீட்ட பத்தி கவலப்படாம அவங்க வெளிநாட்டுல போய் உங்களுக்கு எல்லா ஆட்டத்துலயும் நூறு நூறா அடிக்கனுமா?
நான்: நூறெல்லாம் வேண்டாம்... ஒரு அம்பது அறுபது போதும்.
மனசாட்சி: செருப்பால அடிப்பேன்.
நான்: ஆத்தீ...!
மனசாட்சி: தெரியாமத்தான் கேக்குறேன்... நேத்து ஒழுங்கா விளையாடலேன்னு போய் வீட்ட உடச்சுட்டீங்க... நாளைக்கே ஒரு மேட்ச் நல்லா விளையாடிட்டா உடைச்ச வீட்ட சரி பண்ணி குடுப்பீங்களா?
நான்: அது எப்படி முடியும்!!?
மனசாட்சி: பின்ன என்ன.......
நான்: ஹே... நோ பேட் வர்ட்ஸ்!
மனசாட்சி: பின்ன என்ன வெங்காயத்துக்குடா இன்னைக்கு வீட்ட உடைச்சீங்க!?
நான்: அய்யோ ராமா... நானா போய் வீட்டுல கல்லெறிஞ்சேன்?
மனசாட்சி: எறிஞ்சது சரிதான்னு சொன்ன இல்ல.
நான்: ஷ்ஷ்ஷ்.... இப்போ நான் என்ன பண்ணனும்?
மனசாட்சி: யுவராஜ் நேத்து ஒழுங்கா விளையாடாம விட்டதுல யார் தலையிலையும் மண் விழல... சொல்லப் போனா அவர் தலைல அவரே மண் போட்டுகிட்டாருன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா இந்த அரசியல்வாதிங்க உங்க எல்லாருக்கும் தலையில மட்டுமில்லாம கண்ணுலயும் மண்ண அள்ளி போட்டுட்டு இருக்காங்க.
நான்: ஒத்துக்கிறேன்... நீ சொல்றது அத்தனையும் சரின்னு ஒத்துக்கிறேன்.
மனசாட்சி: ஒத்துக்கிட்டா பத்தாது.... ஒன்னு... ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டுக்கா போய் கல் எறிங்க... இல்ல யுவராஜ் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.
நான்: அய்யா ராசா... அத்தனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாவும் நான் யுவராஜ் கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன்... போதுமா?
மனசாட்சி: ம்ம்ம்... வேற என்ன பண்றது? போய் தொல!
நான்: (ஆள விடுறா சாமி...)

No comments: