Sunday, February 19, 2017

அரசியல்

பேய்கள் ஆளும் உலகமடா - இதில்
நாய்களை நரிகள் வெல்லுமடா!
பொய்யும் புரட்டும் பேசுமடா - இனி
மெய்பின் திரிபவன் மோசமடா!
வாய்கள் சொற்பல உமிழுமடா - துளி
வாய்மை இல்லா அமிலமடா!
தேயும் பிறைபோல் தேசமடா - ஈன்ற
தாயெனச் சொல்வது வேசமடா!
காயும் சருகென வாழ்க்கையடா - பிணி
நோயினில் வாடுது இதயமடா!
நீயும் நானும் முறையிட்டும் - பணம்
பாய்ந்தது பூமியின் அடிவரைக்கும்!

No comments: