Tuesday, January 14, 2014

போகிற போக்கில் ஒரு தத்துவம்

காலையில் ஒரு செய்தியை கேட்டதும் மனதுக்குள் ஒரு பாடல் பாடினேன் (சரி... படித்தேன்!)
நான்: ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...
(என் மனசாட்சிக்கு பொறுக்கவில்லை...)
மனசாட்சி: தம்பி... நீ ரெண்டு விஷயத்த மறந்துட்ட!
நான்: அப்படி என்ன மறந்தேன்?
மனசாட்சி: நீ மொத்தமே அஞ்சு அடி தான்... ஆறடினு சொல்லி பெருமை பீத்திக்காத.
நான்: ரைட் விடு... அடுத்து?
மனசாட்சி: உங்களயெல்லாம் இப்போ யாருடா பொதைக்கிறா... நிலம் சொந்தமாறதுக்கு? செத்ததும் ஒரு டப்பாகுள்ள போட்டு ஒரு மெஷின்குள்ள விட்டா பொடியாகி வெளிய வர போறீங்க. உங்களுக்கெல்லாம் நிலம் இல்லடா... நிலத்துல இருக்கிற தூசு கூட சொந்தம் கிடையாது.
(தெறித்ததை துடைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் பேசத் தொடங்கினேன்)
நான்: ஆமா ஆமா... நீ சொல்றது ரொம்ப சரி... அந்த சாம்பலக் கூட சொந்தக்காரங்க ஆத்துல கரைக்கிறாங்களோ, இல்ல சாக்கடைல கரைக்கிறாங்களோ... யாருக்கு தெரியும்!?
மனசாட்சி: உங்க ஊருல தான் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாதே!!
(அடச்சே... வாய தொறக்க விட மாட்றானே!!)

No comments: